Saturday, April 26, 2008

விரதமும், விருந்தும்

குறிப்பிட்ட சில நாட்களில் பட்டினி விரதம் இருப்பதும், விரதம் முடிந்ததும் விருந்து சாப்பிடுவதும் வழக்கமாக இருக்கிறது. இது ஏன்?

எல்லா மனிதர்களாலும் எப்போதும் விரதம் இருக்க முடியாது. அதை படிப்படியாக பழக்கப்படுத்திக் கொள்ளவே சாஸ்திரம் குறிப்பிட்ட சில நாட்களை விரத நாட்களாக குறிப்பிடுகிறது.

தெய்வத்திற்குப் பிரியமானது என்றால் இயல்பாகவே நல்லதைச் செய்யும் மனப்பான்மை நமக்குள் வந்து விடுகிறது. அத்தகைய பண்பை வளர்த்துக் கொள்ளவே விரதங்கள் பயன்படுகின்றன.

அதே நேரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது விருந்து.

மனிதன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கப் பழக்குவதே பண்டிகை கால விருந்துகள்.

No comments: