
அதை அவருக்கே அர்ப்பணம் செய்து விடுங்கள்.
உங்களுடைய எண்ணம், சொல், செயல்கள் எப்போதும் தூய்மையாகவும், சிறப்பானதாகவும் வைத்துக் கொள்ள வேண்டுங்கள்.
உங்களுக்கு எத்தகைய சிறிய பொருள்கள் கிடைப்பதாக இருந்தாலும் அது அவரது அருளால் மட்டுமே கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
உங்களது எண்ணத்தையும் அவரிடமே ஒப்படைத்து விடுங்கள்.
அதில் எப்போதும் அவரது நினைவை மட்டுமே கொண்டவராக இருங்கள்.
உங்களது பிரார்த்தனையை கேட்கும் அவர், அனைத்தும் நல்லதாகவே நடக்க அருள் புரிவார்.
இறைவன் ஒவ்வொருவரையும் இடைவிடாமல் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.
பின்னால் வந்தாலும், அவரே நீங்கள் முன்னால் செல்வதற்கு வழி காட்டுபவராகவும் இருக்கிறார்.
அவரது அருளே உங்களைச் சுற்றி பாதுகாப்பு வளையமாக இருக்கிறது.
இறைவனுடைய அருளாகிய ஒளி மட்டுமே, அனைவரது இதயத்திற்கும் ஒளி என்னும் அறிவைத் தருவதாக உள்ளது.
உலகம் மீது கருணையும், இரக்கமும் கொண்டு காப்பவராக இருக்கும் இறைவனே அனைத்திலும் அனைத்துமாக இருக்கிறார்.
இந்த உண்மையைப் புரிந்து கொண்டு அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் நடந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment